A Great Collection of all Tamil aggregators

Tuesday, July 6, 2010

என்றாவது ஒரு நாள்



மீதமிருக்கிறப்
பொய்களை
விநியோகம்
செய்து
முடிப்பதற்குள்ளே
பறவை
உதிர்த்த
ஒற்றைச் சிறகு
காற்றில்
மிதந்து வந்து
உள்ளங்கையில்
அமர்வது போல்
உண்மை
தன்னை
விடுவித்துக் கொண்டு
வட்டமிடும்.

5 comments:

  1. அரிதான ஆழமான கவிதை. ஒற்றை வரியில் பாரட்ட முடியாத கவிதை. உங்களின் கவிதைகளில் பல சிறப்பு இருந்தாலும் ஒன்றை சொல்ல (என் புத்திக்கு எட்டிய) விழைகிறேன். இந்த இடத்தில் . 'என்றாவது ஒரு நாள்' கவிதையை இப்படியும் வாசிக்கலாம்:

    உண்மை
    தன்னை
    விடுவித்துக் கொண்டு
    வட்டமிடும்....
    மீதமிருக்கிறப்
    பொய்களை
    விநியோகம்
    செய்து
    முடிப்பதற்குள்ளே
    பறவை
    உதிர்த்த
    ஒற்றைச் சிறகு
    காற்றில்
    மிதந்து வந்து
    உள்ளங்கையில்
    அமர்வது போல்
    *************
    உங்களை பற்றி அறிமுகபடுத்திய சுந்தர் ஜி க்கு எனது நன்றி

    ReplyDelete
  2. நிச்சயமாக கண்ணன்.
    நீங்கள் சொன்ன மாதிரியும் வாசிக்கலாம்.
    உங்களுக்கும் சுந்தர்ஜிக்கும் நன்றி.

    ReplyDelete
  3. ஞானப் பரவசம்.

    ReplyDelete