A Great Collection of all Tamil aggregators

Friday, January 28, 2011

வேண்டுகோள்




முதலும்
முடிவும்
அறிந்தவன்
நான்.

கால
இயந்திரத்திலேறி
பின்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
பிறக்கவில்லை
என்பதை.

முன்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
அழிந்து
விட்டான்
என்பதை.

ஆம்.
தோழர்களே.

முதலும்
முடிவும்
தெரிந்ததால்
என்
பெயர்
கடவுளென
எவரும்
யூகிக்க
வேண்டாம்
என்பதுவே
என்
வேண்டுகோள்.

Sunday, January 23, 2011

செய்யா நாற்பதில் சில



பார்வையால்
தொடரும்
அப்பாவின்
உடல்நலம்
விசாரித்திருக்கலாம்.
தகுதி அட்டையைக்
காட்டிய
மகளிடம்
கை குலுக்கியிருக்கலாம்.
எதிர்பட்ட
பக்கத்து வீட்டுக்காரரைப்
பார்த்துப்
புன்னகைத்திருக்கலாம்.
கோவில் வாசலில்
கை நீட்டிய
முதியவருக்கு
உணவிட்டிருக்கலாம்.
வீதியில்
அடிபட்டுக் கிடந்த
வண்ணத்துப் பூச்சியை
ஓரமாய்
எடுத்து விட்டிருக்கலாம்.
தெருவோரம்
கழிவுகளை
அகற்றிக் கொண்டிருந்த
தொழிலாளிக்கு
ஒரு கோப்பைத்
தேநீர் வாங்கி
தந்திருக்கலாம்.
அலைபேசிக்
கொண்டே
ரயில் தண்டவாளங்களைத்
தாண்டாமல்
இருந்திருக்கலாம்.

Monday, January 3, 2011



கனவில்
வீழ்ந்த
பெருமரத்தால்
அதிர்வடைகிறதென்
கவிதை.

***********************

மயிலிறகு
நீரில்
விழுவதைப்
போல்
நிகழ
வேண்டும்
என்பதே
அவா.
பாறாங்கல்
உருள்வது
போல்
ஆகிவிடுகிறது
பல
சமயங்களில்.

***********************

ஒரு
சாதுர்ய
தூரிகையின்
வர்ண
முயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
உருவத்தை
யூகிக்க
முடிந்தால்
அடுத்தவரின்
கனவுக்குள்
நுழைந்தும்
விடலாமென்பதே
அறிவுறுத்தல்.

***********************