Monday, September 27, 2010
கவிதையின் கண்ணீர்
பிரசுரத்திற்கு
மறுக்கப்பட்ட
கவிதைகள்
ஒன்று கூடி
குற்றஞ்சாட்டின:
வாசிக்கப் படாமல்
இருப்பதைவிட
எழுதப் படாமல்
இருப்பது
சாலச்சிறந்தது.
அவைகளின்
கண்ணீரைத்
துடைப்பதற்கேனும்
எழுத வேண்டும்
ஒரு கவிதையை.
Sunday, September 26, 2010
Monday, September 20, 2010
one night @ the call center
சேத்தன் பகத்தின் இரண்டாவது நாவல்.
இவரது முதல் நாவல் Five Point Someone.
3 இடியட்ஸ் ன் மூலம்.
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் இவர் தன்னை
வித்தியாசப் படுத்துகிறார். IIM/IIT பின்புலம் இவருக்கு
இன்றைய இளைஞனின் பார்வையில் கதை சொல்ல
உதவுகிறது.
one night @ the call center.
சியாம்.
ப்ரியங்கா.
வருண்.
ராதிகா.
இஷா.
மிலிட்டரி அங்கிள்.
ஒரு கால் செண்டரில் இரவு ஷிஃப்ட்.
சியாம் மென்மையான தயக்கங்களும்,Recession குறித்த பயங்களும்
நிரம்பியவன்.
பிரியங்கா அம்மா கோண்டு. சியாம் மேல் இருந்த காதலை
உதறியவள்.அமெரிக்க மைக்ரோஷாப்ட் இளைஞனை மணம்
முடிக்கும் அபிப்ராயத்தில் இருப்பவள்.
வருண் பெண்சிநேகிதிகள்,பீட்ஸா,பர்கர்,கோக் வேகமான
ட்டூ வீலர் டிரைவிங்பிரியன்.
ராதிகா மாமியாருக்கு பயந்து நடுங்கும் நடுத்தர வர்க்கம்.
இஷா மாடலிங்கில் பிரபலமாக முயற்சிப்பவள்.
மிலிட்டரி அங்கிள் அமெரிக்காவில் இருக்கும் பேரனுக்காய்
ஏங்கிக் கொண்டிருப்பவர்.
பக்ஷி அதிகாரத்தொனியும்,ஏமாற்று புத்தியும் கொண்ட
அந்தக் கால் செண்டரின் பாஸ்.
ஒரே இரவு.
அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.
அனைவரின் உயிருக்கு ஆபத்தான நேரத்தில் சியாமுக்கு
அலை பேசியில் ஓர் அழைப்பு.
கடவுளிடமிருந்து.
It is okay to scream in public if you are hungry
"I'm starving". It is okay to make a fuss if you
are tired"I'm so sleepy". But somehow we cannot
say " I just need some more love". Why can't we say
it Shyam? It is a basic a need.
சேத்தன் இந்தக் கேள்வியை நம் அனைவரையும்
நோக்கி கேட்கிறார்.
நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
பி.கு : இதுவும் திரைப்படமாக்கப் பட்டு ஜோதியில்
கலந்து விட்டது.
Saturday, September 11, 2010
ப்ரிய சகி
அம்மாவை முதன் முதலில் எங்கே சந்தித்தீர்கள் அப்பா என்று நம்
பெண் கேட்டதும் உன் கண்களில் ஒரு மின்னல் அடித்ததே...அது
நம் முதல் சந்திப்பில் நமக்குள் பெய்த மழையின் மிச்சம்தானே சகி?
**************
நம் குழந்தை பிறந்த நொடியில் முதலில் அழுதது நான் தான் என்று
என்னை நீ கேலி செய்யும் பொழுதெல்லாம் உன் விழியோரங்களில்
திரண்டு நிற்கிறதே..அதன் பெயர் என்ன சகி?
**************
உன் அடிவயிற்று பிரசவ தழும்புகளை நம் குழந்தைகளின்
தேசத்திற்கான வரைபடம் என்று நான் சொல்லும்போதெல்லாம் நீ
உதிர்க்கும் வெட்கப் புன்னகைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது புரட்டிப் பார்த்துக் கொள்ள சகி.
**************
சகி..இப்போதெல்லாம் உன் மூச்சுக் காற்றில் சுழன்று வீழ்கிறது
என் காமம்.
**************
சகி...நம் காதல் கடிதங்களை உன் புடவைகளுக்கு அடியில் நீ
பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாய். நானோ என் மனசின் அடியில்.
Thursday, September 9, 2010
நிரம்பி வழியும் கோப்பை
இசையின்
மடிப்புகளில்
பதுங்கியிருக்கும்
மெளனத்திற்கான
தேடல்களுடன்
சுழன்று
கொண்டிருக்கிறேன்
இசைத் தட்டுகளுடன்.
*************************
இரவின்
குளிர்ச்சியில்
உருகிவிடுகிறது
எந்தவொரு
வெம்மையும்.
*************************
காற்றில்
ஆடும்
திரைச்சீலையைப்
போல்
உள்ளுக்குள்
அசைந்து
கொண்டேயிருக்கிறது
ஒரு
காமம்.
மடிப்புகளில்
பதுங்கியிருக்கும்
மெளனத்திற்கான
தேடல்களுடன்
சுழன்று
கொண்டிருக்கிறேன்
இசைத் தட்டுகளுடன்.
*************************
இரவின்
குளிர்ச்சியில்
உருகிவிடுகிறது
எந்தவொரு
வெம்மையும்.
*************************
காற்றில்
ஆடும்
திரைச்சீலையைப்
போல்
உள்ளுக்குள்
அசைந்து
கொண்டேயிருக்கிறது
ஒரு
காமம்.
Subscribe to:
Posts (Atom)