Friday, December 17, 2010
துயர் மிகு
வரிகளை
எழுதி
முடிக்கும்
போதெல்லாம்
வந்து
விழுந்து
விடுகிறது
ஓற்றை
கண்ணீர்த்துளி
முற்றுப்
புள்ளியாய்.
***************
நெடிய
தனிமைப்
பயணத்திலும்
வந்து
சேர்ந்து
விடுகிறது
ஒற்றைக்
குழலொலி.
**************
காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?
**************
அம்மா
உன்
சிறகிலிருந்து
பிரிந்த
இறகு நான்.
வானத்தை
அளந்து
கொண்டிருக்கிறேன்
உன் நிழலில்.
*************
பெரும்
இரைச்சலுடன்
விழும்
அருவியில்
தனியனாய்த்
தலை
கொடுப்பதைப்
போலிருக்கிறது
உன் விழிகள்
என்னைச் சுற்றி
மல்லிகைக்
கொடியாய்
படரும்போது.
**************
Monday, December 13, 2010
சுனை
எல்லாவற்றையும்
துடைத்து
எடுத்து
விட்டதாக
எக்காளமிடாதே.
அன்பெனும்
சுனை
என்றும்
வற்றுவதில்லை
என்பதனை
சொல்லிக்
கொள்ள
ஆசைப்படுகிறேன்
மெலிதான
கர்வத்துடன்.
துடைத்து
எடுத்து
விட்டதாக
எக்காளமிடாதே.
அன்பெனும்
சுனை
என்றும்
வற்றுவதில்லை
என்பதனை
சொல்லிக்
கொள்ள
ஆசைப்படுகிறேன்
மெலிதான
கர்வத்துடன்.
Friday, December 3, 2010
தஞ்சை பிரகாஷ்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முதல் விருது
ஆ.மாதவனுக்குக் கொடுக்கிறார்கள். இணையத்தில்
ஜெயமோகன் பக்கத்தில் ஆ.மாதவனின் நேர்காணல்
விரிவாய் வந்துள்ளது. அதில் மாதவன் தஞ்சை
பிரகாஷ் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் வாழும் காலத்தில் மட்டுமல்ல, அவரது
மறைவுக்குப் பின்னும் கூட புறக்கணிக்கப்
படுவதாய் தோணுகிறது.
அங்கிள்
கள்ளம்
கரைமுண்டார் வீடு
மீனின் சிறகுகள்
மற்றும் மிக அற்புதமான சிறுகதைகள்.
அவர் எழுதியவை இன்னும் நிறைய.
அதைவிட அவர் பேசியவை மிக
மிக அதிகம்.
எங்கள் ஆசான் அவர்.
அவரின் கடலளவு சிஷ்யர்களில்
ஒரு துளி நான்.
சுந்த்ர்ஜி கூடவே இருந்தவர்.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள்
ஒவ்வொருவரும் பிரகாஷைப்
தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.
பி.கு: பிரகாஷ் உயிருடன்
இருந்திருந்தால் இதை எழுத
அனுமதித்திருப்பாரா என்பது சந்தேகம்.
ஆ.மாதவனுக்குக் கொடுக்கிறார்கள். இணையத்தில்
ஜெயமோகன் பக்கத்தில் ஆ.மாதவனின் நேர்காணல்
விரிவாய் வந்துள்ளது. அதில் மாதவன் தஞ்சை
பிரகாஷ் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் வாழும் காலத்தில் மட்டுமல்ல, அவரது
மறைவுக்குப் பின்னும் கூட புறக்கணிக்கப்
படுவதாய் தோணுகிறது.
அங்கிள்
கள்ளம்
கரைமுண்டார் வீடு
மீனின் சிறகுகள்
மற்றும் மிக அற்புதமான சிறுகதைகள்.
அவர் எழுதியவை இன்னும் நிறைய.
அதைவிட அவர் பேசியவை மிக
மிக அதிகம்.
எங்கள் ஆசான் அவர்.
அவரின் கடலளவு சிஷ்யர்களில்
ஒரு துளி நான்.
சுந்த்ர்ஜி கூடவே இருந்தவர்.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள்
ஒவ்வொருவரும் பிரகாஷைப்
தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.
பி.கு: பிரகாஷ் உயிருடன்
இருந்திருந்தால் இதை எழுத
அனுமதித்திருப்பாரா என்பது சந்தேகம்.
Subscribe to:
Posts (Atom)