A Great Collection of all Tamil aggregators

Thursday, May 26, 2011

தருணம்



அடர்வனப்
பச்சை இருளில்
திசை
மயங்கித்
திரிகையில்
புதர்ச் சரிவிலிருந்து
முதுகில்
தைக்கும்
பளபளக்கும்
கண்களை
சந்திக்கும்
தருணத்திற்காய்
காத்திருக்கிறது
ஒரு மரணமும்
நீள்குழல்
துப்பாக்கியின்
தோட்டாவும்.

Friday, May 20, 2011

பிரிய சகி


மழை
வண்ணத்துப்பூச்சி
நிலா
காதல்
வறுமை
முத்தம்
பூ
புரட்சி
ஸென்
இல்லாமல்
கவிதை
எழுத
இயலுமாவெனக்
கேட்டவருக்கு
எழுதிக்
கொடுத்தேன்
உன்
பெயரை.

Wednesday, May 11, 2011

வாழ்வெனும் நதி


ஒரு
மனிதனின்
மரணத்துடன்
முடிந்து
விடுவதில்லை
அவனது
வாழ்வு.
அவனது
குழந்தையின்
குழந்தையின்
குழந்தையின்
பார்வை
வழி
வாழ்ந்து
கொண்டிருக்கக்கூடும்
என்பது
உண்மையெனில்
எனது
தாத்தாவின்
தாத்தாவின்
தாத்தாவினது
வாழ்வைத்தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனா?