Sunday, November 27, 2011
REVOLUTION 2020
Five point someone
One night @ the call center
The 3 mistakes of My life
2 states : The story of my marriage.
இந்த வரிசையில்
சேத்தன் பகத்தின்
ஐந்தாவது நாவல்
Revolution 2020.
Engineering Entrance Test ல்
Rank வாங்க
மாணவ,மாணவியர்கள்
பெற்றோர்களின் வற்புறுத்தலால்
படும் அவதிகளை மட்டும்
பேசவில்லை இந்த நாவல்.
பணத்தைக் குறிவைத்து
புது வெள்ளமென
முளைக்கும்
பொறியியல் கல்லூரிகளைப்
பற்றியும் எழுதியுள்ளார்
அரசியல் கலந்து.
கூடவே காதலும்
அதற்கே உரிய
கொஞ்சம்
அத்துமீறலும்.
Love.
Corruption.
Ambition.
இந்த மூன்று விஷயங்களும்
அனைவருடனும்
பிணைந்துள்ளது போல்
நாவலில் வரும்
ஆர்த்தி
கோபால்
ராகவ்
மற்றும்
சுக்லாஜி
அனைவரையும்
இயங்க வைக்கிறது.
நம் தேசம் குறித்த
விமர்சனத்தை
சேத்தன் அடங்கிய
தொனியில்
வைக்கிறார்.
இவரது எல்லா நாவல்களின்
கடைசியிலும்
ஒரு Magic நடக்கும்.
இதிலும் கூட.
சேத்தன்
ஆங்கிலத்தில் எழுதும்
சுஜாதா.
(வாத்தியாரின் சிஷ்யர்கள்
கோபிக்க வேண்டாம்.)
நாவலின்
கடைசியில்
ஆசிரியர்
சொல்வார்.
“You are a good person”.
CHETAN BHAGAT க்கும்
இதையே நாம் சொல்வோம்.
“You are good Chetan".
இந்தப் புத்தகத்தை
எனக்கு அனுப்பிய
ப்ரியாவுக்கு
மேலே உள்ள
பூக்கள் அனைத்தும்.
Friday, October 14, 2011
அஞ்சலி
Saturday, June 18, 2011
ரகசியம்
Sunday, June 5, 2011
Thursday, May 26, 2011
தருணம்
Friday, May 20, 2011
பிரிய சகி
Wednesday, May 11, 2011
வாழ்வெனும் நதி
Wednesday, April 27, 2011
கோடைத் திருவிழா
Friday, March 11, 2011
விற்பனை
Monday, February 7, 2011
Wednesday, February 2, 2011
Friday, January 28, 2011
வேண்டுகோள்
Sunday, January 23, 2011
செய்யா நாற்பதில் சில
பார்வையால்
தொடரும்
அப்பாவின்
உடல்நலம்
விசாரித்திருக்கலாம்.
தகுதி அட்டையைக்
காட்டிய
மகளிடம்
கை குலுக்கியிருக்கலாம்.
எதிர்பட்ட
பக்கத்து வீட்டுக்காரரைப்
பார்த்துப்
புன்னகைத்திருக்கலாம்.
கோவில் வாசலில்
கை நீட்டிய
முதியவருக்கு
உணவிட்டிருக்கலாம்.
வீதியில்
அடிபட்டுக் கிடந்த
வண்ணத்துப் பூச்சியை
ஓரமாய்
எடுத்து விட்டிருக்கலாம்.
தெருவோரம்
கழிவுகளை
அகற்றிக் கொண்டிருந்த
தொழிலாளிக்கு
ஒரு கோப்பைத்
தேநீர் வாங்கி
தந்திருக்கலாம்.
அலைபேசிக்
கொண்டே
ரயில் தண்டவாளங்களைத்
தாண்டாமல்
இருந்திருக்கலாம்.
Monday, January 3, 2011
கனவில்
வீழ்ந்த
பெருமரத்தால்
அதிர்வடைகிறதென்
கவிதை.
***********************
மயிலிறகு
நீரில்
விழுவதைப்
போல்
நிகழ
வேண்டும்
என்பதே
அவா.
பாறாங்கல்
உருள்வது
போல்
ஆகிவிடுகிறது
பல
சமயங்களில்.
***********************
ஒரு
சாதுர்ய
தூரிகையின்
வர்ண
முயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
உருவத்தை
யூகிக்க
முடிந்தால்
அடுத்தவரின்
கனவுக்குள்
நுழைந்தும்
விடலாமென்பதே
அறிவுறுத்தல்.
***********************
Subscribe to:
Posts (Atom)