A Great Collection of all Tamil aggregators

Monday, January 23, 2012

இருள் நீக்கி



ஒரு
மெழுகுவர்த்தி
ஓர்
அகல்விளக்கு
ஒரு
தீப்பந்தம்
ஒரு
நட்சத்திரம்
ஒரு
நிலவு
ஒரு
கதிரவன்
விரட்டா
இருளை
வழித்துத்
துடைத்து
எறிகிறது
உன்
விழிகளின்
வெளிச்சம்.

4 comments:

  1. சூப்பர் ...
    இதை தான் பாரதி சொன்னானோ !
    ஒளிப் படைத்த கண்ணினாய் வா வா

    ReplyDelete
  2. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோவை தொட்டசைத்த வரிகள். அருமை மதுமிதா.

    ReplyDelete
  3. ஒரு பெண்ணின் அன்புப் பார்வையைப் பார்த்திருக்கிறீர்கள் போலும்.அருமை !

    ReplyDelete
  4. கண்ணொளியை விஞ்சிட‌
    மின்னொளியும் அஞ்சும்.

    மெழுகுவ‌ர்த்திக்கு ஒரு சிறு காற்று

    அகல்விளக்குக்கு ஒரு கை வீச்சு

    தீப்பந்தத்திற்கு ஒரு மூங்கில் குழல்

    நட்சத்திரத்திற்கு ஒரு ம‌ர‌க் கிளை

    நிலவுக்கு ஒரு வெண்மேக‌ம்

    கதிரவனுக்கு ஒரு கார்மேக‌ம்

    இருளுக்குத் துணையாக.

    விழிகளின் வெளிச்சம் ம‌ட்டுமே
    ப‌ர‌விப் பாயும் பாத்திர‌ங்க‌ளில்.

    ReplyDelete