A Great Collection of all Tamil aggregators

Tuesday, October 12, 2010

அம்புகள்

தல்ஸ்தோய்
குளிரில்
விறைதார்.
பாரதி
யானையின்
காலில்
மிதிபட்டார்.
ஆத்மாநாம்
மாடியிலிருந்து
தாவினார்.
ஆதவன்
சிருங்கேரியில்
மூழ்கினார்.
மரணத்தின்
முன்
வீசப்பட்ட
எதிர் கேள்விகள்
முனை முறிந்த
அம்புகளோ?

5 comments:

  1. என்னை பொறுத்தவரை கவிதையில் புதிய முயற்சி. வாழ்த்துகள். //முனை முறிந்த அம்புகளோ?// இந்த கேள்வி வரை அந்த நிலை அடையுமா என்று தெரியவில்லை நண்பரே ... ஆனாலும் அப்படியானவர்களின் இறுதி நாட்கள் பற்றியும் அப்போது இருந்த மன நிலை,மன பிறழ்வு பற்றி கேள்வி படும்போது இன்னும் பல 'ஏன்'கள் எழுகிறது. இதுவும் முனை முறிந்த அம்புகளோ ...
    //ஆத்மாநாம்
    மாடியிலிருந்து
    தாவினார்//
    சரிதானா இந்த தகவல் ....நான் கேள்விப்பட்ட வரை கிணற்றில் முழ்கி தற்கொலை செய்துகொண்டார் என்றுதான்.

    ஒரு சிறு திருத்தம்
    //விறைதார்// விறைத்தார்

    ReplyDelete
  2. எதோ வித்தியாசமாகத் தான் இருக்கிறது..

    ReplyDelete
  3. நன்றி கண்ணன்.
    ஆத்மாநாமின் மரணம் நினைவின்
    அடுக்குகளிலிருந்து உருவியது.
    உறுதி படுத்த முடியவில்லை.
    விரல்கள் இன்னும் தட்டச்சுக்குப்
    பழகவில்லை.
    இடுகையிடும் முன் பார்த்து
    தவிர்த்திருக்கலாம்.
    மன்னிக்க.

    ReplyDelete
  4. //மன்னிக்க// பெரிய வார்த்தை வேண்டாம் நண்பரே ...
    தவறு எல்லோருக்கும் இயல்பான ஒன்று
    தற்போது கூட மாற்றலாம். posting edit -ல் உள்ளே சென்று முயற்சி செய்க. ஆத்மா நாம் பற்றி நானும் ஒரு இடுகை இட்டுள்ளேன் நண்பரே.
    முடிந்தால் படித்து விட்டு கருத்துரை இடுக நண்பரே.
    ( http://rvelkannan.blogspot.com/2010/04/blog-post_08.html )

    ReplyDelete
  5. இன்னும் எத்தனையோ முகமறியாதவர்களின் குடும்பங்களிலும் பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது முனையற்ற அம்பு முடிவற்றதாய்.

    ReplyDelete