A Great Collection of all Tamil aggregators

Monday, September 27, 2010

கவிதையின் கண்ணீர்



பிரசுரத்திற்கு
மறுக்கப்பட்ட
கவிதைகள்
ஒன்று கூடி
குற்றஞ்சாட்டின:
வாசிக்கப் படாமல்
இருப்பதைவிட
எழுதப் படாமல்
இருப்பது
சாலச்சிறந்தது.
அவைகளின்
கண்ணீரைத்
துடைப்பதற்கேனும்
எழுத வேண்டும்
ஒரு கவிதையை.

4 comments:

  1. அந்த கவிதையாவது பிரசுரிக்கப்படுமா மது... ?
    (படைப்பு என்றுமே படைப்புதான்)

    ReplyDelete
  2. எழுதப் பட்டதை வாசித்துக் களித்தாயிற்று.பட இருப்பவற்றையும் வாசிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவற்றிடம் சொல்லவில்லையா?

    ReplyDelete
  3. புறக்கணிக்கப்பட்ட கவிதைக்காக ஒரு கவிதை...

    ரொம்ப நல்லா இருக்குங்க..

    வாசிக்கும் போதே வே.இராமசாமியின் கவிதையொன்றும் நினைவுக்கு வந்தது.
    ---------------------------------
    மழைச் சகதியில்
    யாரோ தவறவிட்ட
    சிவப்பு கெட்ச்சைப்போல
    ரத்தம் கக்கிச்
    செத்தான் கவிஞன்

    பிரேதப் பரிசோதனை
    செய்துபார்த்த
    மருத்துவர்கள் சொன்னார்கள்
    அவன் நெஞ்சில்
    புறக்கணிக்கப்பட்ட
    கவிதையன்று
    புற்றுக்கட்டி வளர்ந்திருந்தது

    - வே.இராமசாமி -

    ReplyDelete
  4. உங்களது கவிதையும் கமலேஷ் பகிர்ந்து கொண்ட கவிதையும் என்னமாய் ஒரு கலைஞனின் மெல்லுணர்வை கல்லும் கரையும் வண்ணம் சொல்லிச் செல்கின்றன.

    புறக்கணிப்பின் வலி கொடியது!

    எதிர்பார்ப்புகள் அங்கீகாரங்களை புறந்தள்ளும் போது தான் வலியற்றிருப்பது சாத்யம் போலும்!

    ReplyDelete