A Great Collection of all Tamil aggregators

Monday, September 20, 2010

one night @ the call center


சேத்தன் பகத்தின் இரண்டாவது நாவல்.
இவரது முதல் நாவல் Five Point Someone.
3 இடியட்ஸ் ன் மூலம்.
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் இவர் தன்னை
வித்தியாசப் படுத்துகிறார். IIM/IIT பின்புலம் இவருக்கு
இன்றைய இளைஞனின் பார்வையில் கதை சொல்ல
உதவுகிறது.

one night @ the call center.

சியாம்.
ப்ரியங்கா.
வருண்.
ராதிகா.
இஷா.
மிலிட்டரி அங்கிள்.

ஒரு கால் செண்டரில் இரவு ஷிஃப்ட்.
சியாம் மென்மையான தயக்கங்களும்,Recession குறித்த பயங்களும்
நிரம்பியவன்.
பிரியங்கா அம்மா கோண்டு. சியாம் மேல் இருந்த காதலை
உதறியவள்.அமெரிக்க மைக்ரோஷாப்ட் இளைஞனை மணம்
முடிக்கும் அபிப்ராயத்தில் இருப்பவள்.
வருண் பெண்சிநேகிதிகள்,பீட்ஸா,பர்கர்,கோக் வேகமான
ட்டூ வீலர் டிரைவிங்பிரியன்.
ராதிகா மாமியாருக்கு பயந்து நடுங்கும் நடுத்தர வர்க்கம்.
இஷா மாடலிங்கில் பிரபலமாக முயற்சிப்பவள்.
மிலிட்டரி அங்கிள் அமெரிக்காவில் இருக்கும் பேரனுக்காய்
ஏங்கிக் கொண்டிருப்பவர்.
பக்‌ஷி அதிகாரத்தொனியும்,ஏமாற்று புத்தியும் கொண்ட
அந்தக் கால் செண்டரின் பாஸ்.
ஒரே இரவு.
அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.
அனைவரின் உயிருக்கு ஆபத்தான நேரத்தில் சியாமுக்கு
அலை பேசியில் ஓர் அழைப்பு.

கடவுளிடமிருந்து.

It is okay to scream in public if you are hungry
"I'm starving". It is okay to make a fuss if you
are tired"I'm so sleepy". But somehow we cannot
say " I just need some more love". Why can't we say
it Shyam? It is a basic a need.

சேத்தன் இந்தக் கேள்வியை நம் அனைவரையும்
நோக்கி கேட்கிறார்.

நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

பி.கு : இதுவும் திரைப்படமாக்கப் பட்டு ஜோதியில்
கலந்து விட்டது.

1 comment:

  1. மன்னியுங்கள். கொஞ்சம் செர்வர் தகராறு.உங்கள் வலைப்பூ சமயங்களில் மலர்வதில்லை.நல்ல அறிமுகம்.இத்தனை விதமான ரசனை இருப்பதுதான் மதுமிதாவின் எழுத்தில் பீறிடும் கவித்வம்.

    ReplyDelete