A Great Collection of all Tamil aggregators

Tuesday, November 16, 2010

ப்ரிய சகி



நம் குழந்தையை நீ முத்தமிடும் போதெல்லாம்
நீ எனக்கு தந்த முத்தத்தின் நீட்சிதானோ இதுவென
நினைக்காமலிருக்க முடியவில்லை.

***********************************************

நம் அலுவலகத்திற்கு தற்செயல் விடுப்பு எடுத்துக்
கொண்டு அந்தக் கடற்கரையில் கால்கள் நனைத்து
திரிந்தோமே அந்த மணற்துகள்கள் இன்னமும்
உதிராமல் ஒட்டிக்கொண்டிருக்கின்றன மனசுக்குள்.

***********************************************

நம் திருமணத்தன்று உன் நெற்றிக்குத் திலகமிடும்
போது என் விரல்கள் நடுங்கியதற்கு சுற்றமும்
நட்பும் நகைக்க உனக்கு மட்டும் புரிந்ததுதானே
அது நம் காதலின் அதிர்வென.

***********************************************

என் காதலுக்குச் சம்மதம் சொன்ன அன்று நீ
உடுத்தியிருந்த புடவையில் நம் குழந்தைக்குத்
தொட்டில் கட்டிய போது எனக்குத் தோன்றியது
அது நம் காதலின் வெற்றிக் கொடியென.

***********************************************

அன்று நம் காதலுக்காகவே இளையராஜா மிக
இனிமையான பாடல்களைத் தந்தார் என்று
சொன்னால் இளையரஜா ரசிகர்கள் மிகவும்தான்
கோபித்துக் கொள்கிறார்கள். அவர்களை
மன்னித்து விடு சகி.

***********************************************

7 comments:

  1. காதலின் மொழி புது வடிவத்தில்.கலக்குங்க மது.

    ReplyDelete
  2. ப்ரியசகி காதலால் உருகுகிறாள் !

    ReplyDelete
  3. காத‌லில் வென்ற‌ மீசை முறுக்கு தெறிக்கிற‌து உள்ளுக்குள்.
    ஹும்...எல்லாருக்குமா வாய்க்கிற‌து இது?

    ReplyDelete
  4. மழைக் காலத்தில் துளிர்க்கும் வசன கவிதைகளின் சிருங்காரம் வெகு ஜோர்!

    ReplyDelete
  5. //நம் திருமணத்தன்று உன் நெற்றிக்குத் திலகமிடும்
    போது என் விரல்கள் நடுங்கியதற்கு சுற்றமும்
    நட்பும் நகைக்க உனக்கு மட்டும் புரிந்ததுதானே
    அது நம் காதலின் அதிர்வென.//parattugal
    polurdhayanithi

    ReplyDelete
  6. மென்மையாய் வருடுகின்றன கவிதையும் நினைவுகளும்

    ReplyDelete