A Great Collection of all Tamil aggregators

Thursday, August 26, 2010

காத்திருக்கும் ஒற்றைக் கேள்வி



அவரை
எவரேனும்
சந்திக்க
நேர்ந்தால்
என் முகவரியைச்
சொல்லுங்கள்.

அவரிடம்
கேட்பதற்கான
கேள்வியொன்று
நீரில்
மூழ்க மறுக்கும்
பலூன் போல்
திமிறிக்கொண்டிருக்கிறது
மனசின் ஆழத்துள்.

5 comments:

  1. அருமை நண்பரே,
    இப்படியான கேள்வியும் நபரும் எனக்கும் உண்டு. ஆனால் பார்த்தபோது காற்று இறங்கிய பலுனாக மாறிவிடுகிறது ஏன்...

    ReplyDelete
  2. கவிதை முடியாத மாதிரி.... சொன்னால் தான் முடியுமா?

    ReplyDelete
  3. எங்கிட்ட சொல்லுங்க மது- நான் கேட்டுச் சொல்றேன். நல்லாருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு வலைக்கு வந்து.

    ReplyDelete
  4. ஒரு தவிப்புணர்வை எளிமையாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டது கவிதை.

    ReplyDelete