
துயர் மிகு
வரிகளை
எழுதி
முடிக்கும்
போதெல்லாம்
வந்து
விழுந்து
விடுகிறது
ஓற்றை
கண்ணீர்த்துளி
முற்றுப்
புள்ளியாய்.
***************
நெடிய
தனிமைப்
பயணத்திலும்
வந்து
சேர்ந்து
விடுகிறது
ஒற்றைக்
குழலொலி.
**************
காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?
**************
அம்மா
உன்
சிறகிலிருந்து
பிரிந்த
இறகு நான்.
வானத்தை
அளந்து
கொண்டிருக்கிறேன்
உன் நிழலில்.
*************
பெரும்
இரைச்சலுடன்
விழும்
அருவியில்
தனியனாய்த்
தலை
கொடுப்பதைப்
போலிருக்கிறது
உன் விழிகள்
என்னைச் சுற்றி
மல்லிகைக்
கொடியாய்
படரும்போது.
**************