மழை
Thursday, August 26, 2010
காத்திருக்கும் ஒற்றைக் கேள்வி
அவரை
எவரேனும்
சந்திக்க
நேர்ந்தால்
என் முகவரியைச்
சொல்லுங்கள்.
அவரிடம்
கேட்பதற்கான
கேள்வியொன்று
நீரில்
மூழ்க மறுக்கும்
பலூன் போல்
திமிறிக்கொண்டிருக்கிறது
மனசின் ஆழத்துள்.
Sunday, August 22, 2010
ஆறுதல்
ஓடிக்கொண்டிருந்த
நதியைக்
காணவில்லை.
தங்கியிருந்த
குளத்தைக்
காணவில்லை.
அருவிகள்
மட்டும்
கொட்டிக்
கொண்டிருக்கின்றன
ஆசுவாசப்படுத்த.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)