A Great Collection of all Tamil aggregators

Saturday, June 26, 2010

ஏன் இப்படி?

எனக்கு ஜெயமோகனின் எழுத்துகள் மீது அபார மோகம்.
அதே மாதிரி சாருநிவேதிதாவின் எழுத்துக்கள் மீதும்.
இரண்டு பேரின் எழுத்துக்கள் வெவ்வேறு வகை.
ஆனால் இவர் அவரின் எழுத்துக்களைப் புறந்தள்ளுகிறார்.
அவர் இவரின் எழுத்துக்களை எள்ளி நகையாடுகிறார்.
உபரியாய் இவரின் ரசிகக்கூட்டம் அவரையும்
அவரின் ரசிகக்கூட்டம் இவரையும் போட்டுத் தாக்குகிறார்கள்.
அதனை இலக்கிய விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
பின் என்னதான் நடக்கிறது?
இதேமாதிரி காலச்சுவடும் பிடிக்கும். உயிர்மையும் பிடிக்கும்.
ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம்
இருவரும் (கண்ணன்,மனுஷ்யபுத்திரன்) ஒருவரை ஒருவர்
சாடிக் கொள்கிறார்கள்.
இவைகளுக்கிடையே நான் மிரள மிரள விழித்துக்கொண்டு
நிற்கிறேன். எதாவது ஒரு பக்கம் ஒதுங்குவதுதான்
பொது நியதியோ?

Friday, June 25, 2010

காணவில்லை

ஆம்.
தோழர்களே.
நட்சத்திரங்களைத்
தொலைத்தவன்
நான்.
காணாமல்
போனவர்களைப்
பற்றிய
அறிவிப்பில்
வெளியிடவேண்டும்
என்
பெயரையும்.

Thursday, June 24, 2010

மற்றொரு பிலாக்

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்னொரு பிலாக்கிலும் எழுதிகொண்டிருக்கிறேன்.
வருகைக்கும் வாசிப்பிற்கும் கீழே:

http://Madumithaa.blogspot.com

Monday, June 21, 2010

கடிதங்களின் மரணம்

நலம்
நலமறிய
ஆவல்
சொன்ன
நீலப் பறவையின்
சிறகுகளை
முறித்தது
யார்?

சமுத்ரம்







முதல்
துளியில்
நனைவதின்
சந்தோஷம்
சமுத்ரமாய்
விரியட்டும்.